வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (06) பிற்பகல் 3.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (07) வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பகுதிகளில் நிலவும் வெப்ப அலை, மனித உடலால் உணரக்கூடிய அளவில் உள்ளது என்றும், இது கவனம் தேவைப்படும் நிலை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

