(அஸ்லம் எஸ்.மெளலானா)
கல்முனை மாநகர சபையில் சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றி, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் எம்.ஏ. நிசாருக்கான பிரியாவிடை நிகழ்வு செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது.
கல்முனை மாநகர சபை பொறியியல் பிரிவின் ஏற்பாட்டில் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌசி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை மாநகர சபையில் அவரது எட்டு வருட கால உன்னத சேவை குறித்து எடுத்தியம்பி, பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன் நினைவுப் பரிசு வழங்கியும் கெளரவிக்கப்பட்டார்.
