பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம்; புதிய தலைவர் உப தலைவர் தெரிவு செய்யப்பட்டனர்.

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பொதுக்கூட்டம் இன்றைய தினம (14.06.2025) ; ஆலய வளாகத்தில் நடைபெற்றது. தலைவர் மற்றும் உப தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

கடந்த இரண்டு வருட காலமாக ஆலயத்துக்கான புதிய தலைவர் தெரிவு தொடர்பில் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த 14. 5 .2025 திகதி கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்காளிகள் மற்றும் எதிராளிகளுக்கு இடையே நீதிமன்றத்தினால் சமரசம் ஏற்படுத்தப்பட்டு இன்றைய தினம் பகிரங்கமான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்துமாறு நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்டு இருந்தது. அதற்கமைவாக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.


கூட்டத்திற்கு நீதிமன்ற பதிவாளர், மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர், மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், திரௌபதி அம்மன் ஆலய முகாமைக் குழு, வண்ணக்கர்கள், நிர்வாகத்தினர், மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.


விசேட அதிரடிப் அடிப்படையினர், பெரியநீலாவணை பொலிசாரால் கூட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்கப்பட்டிருந்தது.


பதிவாளர் முன்னிலையில் செயலாளர் சிவலிங்கம் மயூரதன் அவர்களினால் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு கூட்டறிக்கை, மற்றும் கணக்கு அறிக்கை என்பன வாசிக்கப்பட்டு, தலைவர் தெரிவு பொது மக்களிடம் விடப்பட்டது. பதிவாளர் அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டு குழப்பநிலை தணிக்கப்பட்டு இறுதியில் தலைவர் மற்றும் உப தலைவர் ,தெரிவுகள் இடம்பெற்ன.

தலைவராக பாண்டிருப்பை பிறப்பிடமாக கொண்ட வன்னிமை பணிக்கொண்ணா குடி வழியை சேர்ந்த நடன சபாபதி சுதர்சன் அவர்களும், உபதலைவராக திரு சிவானந்தராஜா முகுந்தன் அவர்களும், தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.
இத்தெரிவினை பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தாலும் சிலர் தெரிவுக்கு எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில் கூட்டம் நிறைவு பெற்றது

You missed