பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி, கடந்த விசாக பூரணை தினத்தின் போது, சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.