உலக சுற்றாடல் தினமான நேற்று 05.06.2025 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையும் , நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து சுற்றாடல் சார் செயற்பாடுகளை முன்னெடுத்தன.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது பிளாஸ்டிக்கினால் மாசுபடுதலை முடிவுக்கு கொண்டு வருவோம் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கும் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் போது கல் முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் Dr. குணசிங்கம் சுகுணன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக காடு மீள் உருவாக்கம் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான 100 மரக்கன்றுகள் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி. ராகுல நாயகி சஜீந்திரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்வின்போது மரநடுகை செயற்பாடுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வின் போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பிரதிநிதிகளுடன் நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

















