அதிர்ந்துகொண்டிருக்கும் யாழ் அரசியல் ; டக்ளஸ் தேவானந்தாவிடம் நேரில் சென்று உதவி கோரிய சி.வி.கே


உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவடைந்து சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதில் வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகள் பல்வேறு தீவிர பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றனர்.


இதில் இலங்கையின் முக்கிய மாநகர சபைகளில் ஒன்றான யாழ் மாநகர சபையின் ஆட்சியை ஆளுங்கட்சிக்கு விடாது தமிழ்க் கட்சிகள் கைப்பற்ற வேண்டும் எனும் நோக்கோடு யாழில் தமிழ்த்தேசியக் கட்சிகள் தீவிரமாக பல சுற்றுப்பேச்சுவாhத்தைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இதில் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இடையே பேச்சுவார்த்தைகளும் இடம் பெற்றன.


இந்த தமிழ்த் தேசிய கட்சிகள் சேர்ந்து ஆட்சியமைப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் EPDP கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நள்ளிரவில் குறுஞ்செய்தி அனுப்பி இன்று நேரடியாக சென்று தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை டக்ளஸ் தேவானந்தாவை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளோட் தலைவர் சித்தார்த்தன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு பேசியிருந்த நிலையில் இருவருக்குமான நேரடிச்சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.

தேசியம், கொள்ளை என்று பேசிய தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் அவர்களுக்கிடையில் இணக்த்தை ஏற்படுத்தாது இவ்வாறு முயற்சிப்பது மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் நேரடியாக EPDP கட்சி அலுவகத்திற்கு சென்று சேர்ந்து ஆட்சியமைக்க கோரிக்கை முன்வைத்துள்ளமை யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று