செல்லையா பேரின்பராசா
வரலாற்று சிறப்பு மிக்க துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய உற்சவத்தின் விசேட நிகழ்வுகளில் ஒன்றான ஊர்காவல் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.
இவ் ஆலய பிரதம பூசகர் சிவத்திரு க.ஜமுனாகரன் உதவி பூசகர் த.சசிகரன் ஆகியோர் ஊர்காவல் நிகழ்வு பூசைகளை நடாத்தினர், இந் நிகழ்வில் பல கலாசார நடனங்களும் இடம்பெற்றது.










