கல்முனை ஆதார வைத்தியசாலையில் மனநல பிரிவின் ஊடாக மனநல வைத்திய நிபுணர் டாக்டர் அர்ச்சினி சமரநாயக்க அவர்களினால் “விடியல்” மனநல வட்ட ஒன்று கூடலும், பயிற்சி செயலமர்வும் (25) இடம்பெற்றுள்ளது.


“விடியல்” என்பது ஊழியர்களினதும் சமூகம் சார்ந்தவர்களினதும் மனநலத்தை பேணும் திட்டமாகும்.
இங்கு பங்குபற்றுபவர்கள் வைத்தியசாலையினுள் சக சேவையார்களின்,
மற்றும் தாங்கள் சார்ந்த சமூகத்தில் உள்ளவர்களின், மனச்சோர்வு, கவலை போன்ற சில மனநிலை பிரச்சனைகளுக்கு தீர்வு தேவையாக இருப்பவர்களை இனம் கண்டு இங்கு கொண்டு சேர்ப்பதாகும். என சுருக்கமாக கூறப்பட்டது.

இந்நிகழ்விற்கான ஆலோசனைகளோடு தலைமையும் தாங்கினார்,
கல்முனை ஆதார வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்கள்.
தனது தலைமையுரையில் “விடியல்” பற்றிய அறிமுக உரையுடன்,
உலக சுகாதார நிறுவனத்தின் திட்டமான வைத்தியத்துடன், மனநல சுகாதாரமும் அவசியமானது என்ற தொனிப்பொருளுடன், 
மனநிறைவு, மனதிருப்திக்கான கருத்துரைகளை வழங்கினார்.


அடிப்படை தேவைகளுடன், மனநிறைவுக்கான தேவைகளையும்  நிறைவு செய்வது உளநலத்திற்கு அவசியமானது எனவும் சுட்டிக் காட்டப்பட்டது.
வாழ்க்கையில் உச்ச மகிழ்ச்சியை அடையும் வழிதான் மனநல சுகாதார திட்டம் “விடியல்” எனவும் இளமையில்  எமது எதிர்பார்ப்புக்கள் வைத்தியர், பொறியியலாளர் போன்ற பதவிகளாக இருக்கும். கால மாற்றம் இறுதியில் அதாவது ஓய்வு பெறும் வேளையில் அனைத்து எதிர்பார்ப்புக்களும் விலகி மன நிம்மதியை மட்டும் தேடும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றோம். இதுதான் உண்மையும் என கூறினார்.

உள நல வைத்திய நிபுணர் Dr.அர்ச்சினி சமரநாயக்க அவர்களினால் மிக எளிமையான முறையில் பயிற்சிகள் இடம் பெற்றன. அனைவரும் மனநிறைவுடன் கலந்து கொண்டனர். பயிற்சிகள் தொடராக நடைபெறும் எனவும் கூறப்படுகின்றது. இந்நிகழ்விற்கு  மனநல வைத்திய நிபுணர் அவர்களுடன், மனநல வைத்தியர் Dr. S.கேமகாந்தன் , தாதிய உத்தியோகஸ்தர்கள் T.உதயதாஸ் ஐயர், R.B.A. டில்றுக்சி ஆகியோர் இணைந்து பல சம்பாஷனை நிகழ்வுகளை, தெளிவூட்டும்  வகையில் வெளிக்காட்டி சிறப்பித்துள்ளனர்.