உணவு ஒவ்வாமை மட்டக்களப் நகர் பாடசாலைகளைச் சேர்ந்நத சுமார் 100 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நகரில் உள்ள மூன்று பாடசாலைகளை சேர்ந்த சுமார் 100 உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுவரை சுமார்100 மாணவர்களும்இ 2 ஆசிரியர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பிலுள்ள புனிதமைக்கல் கனிஷ்ட பாடசாலைஇ கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயம் இ கல்லடி வினாயகர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைகளில் இடைவேளையின் போது குறித்த பாடசாலைகளில் அமைந்துள்ள சிற்றுண்டி சாலைகளில் உணவு வாங்கி மாணவர்கள் உட்கொண்டுள்ளனர்.
அவ்வாறு மாணவர்கள் வாக்கி உட்கொண்ட உணவு ஒவ்வாமையால் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வுணவை உட்கொண்ட மாணவர்களுக்கு வாந்திஇ தலைசுற்று ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தினர் துரிதமான நடவடிக்கை மேற்கொண்டுஇ நோய்காவு வண்டிகள் மூலம் மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவை தொற்றா நோய்கள் பிரிவின் வைத்திய அதிகாரி எஸ்.உதயகுமார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
இதுதொடர்பில் மட்டக்களப்பு பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.