கலை கலாச்சாரங்களை பேணும் வகையிலும் , சேவையாளர்களினதும், நோயாளர்களினதும் உடல் உள மன சோர்வுநிலைக்கு ஓர் புத்துணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் தலைமையில் நேற்று (2) சித்திரை சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
நாளாந்த சேவைகளை விஸ்தரித்து நோயாளர்களுக்கான வைத்தியசாலையின் சேவையின் தரத்தினை இன்னும் மேம்படுத்தும் நோக்கிலான பல பயிற்சி பட்டறைகள், சேவைகளுடன் தொடர்புபட்ட தொடர்பாடல்கள் என்பவற்றை மிக நேர்த்தியாக பயிற்சிகள் மூலம் வழிநடத்திக்கொண்டிருக்கும் வேளையிலும். நிகழ்வுகளும் தொடர்வது குறிப்பிடத்தக்க விடயம்.
இன்றைய விளையாட்டு நிகழ்வுக்கான நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பமானது.
ஆரம்ப உரையில் பணிபாளர் சுகுணன் குணசிங்கம் அவர்கள்
” சக மனிதர்களுடன் ஒரு புரிந்துணர்வை விளையாட்டுக்களின் மூலம் நாம் பெறுகின்றோம். வெற்றி பெற்றவர் தோல்வி கண்டவர் என்ற வேறுபாடின்றி வென்றவரை தோற்றவர் பாராட்டும் மனப்பக்குவமும், தோற்றவரிற்கு வென்றவர் தனது பரிசுகளை வழங்கி கௌரவிக்கும் பெரும்தன்மையும் உருவாக வேண்டும். எனவும்
இங்கு பார்வையாளர்களாக வந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள்” என கூறினார்
































































































