மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நோன்பு பெருநாள் தொழுகை

(ஏ.எல்.எம்.ஷினாஸ், ஜெஸ்மி எம். மூஸா , றாசிக் நபாயிஸ்)

மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம், அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் பாக்கியத்துசாலிஹாத் பள்ளிவாசல் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை  (10) மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் காலை 6:20 மணிக்கு நடைபெற்றது. 

இம்முறை கடற்கரை திறந்தவெளியில் இமாம் ஜமாத்தாக நடைபெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பெருநாள் தொழுகை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற குத்பா பிரசங்கத்தையும் மௌலவி அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எல். முபாறக் (மதனி) நடாத்தினார்கள். ஆண்கள், பெண்களுக்கு வெவ்வேறாக இட வசதிகள் ஒதுக்கப்பட்டு தொழுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. பெருநாள் தொழுகையின்போது, பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரும் கடமையில் ஈடுபட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது