(பெரியநீலாவணை பிரபா)


கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று இன்று (12)கரையொதுங்கியது.
பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை அண்டிய கடற்கரை பகுதியில் குறித்த சடலம் காணப்பட்டுள்ளது .

சடலத்தை அடையாளம் காணும் பொருட்டு பெரிய நீலாவணை பொலிசார் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டது.


பிந்தி கிடைத்த தகவலின் படி சடலமாக கரை ஒதுங்கியவர் செட்டிபாளையத்தை சேர்ந்த கதிரவேல் பத்மராஜ் (வயது 59) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவாரென அவரது மனைவி வசந்தி கல்முனை நெற்றுக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம்(11) தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக தெரிவித்து தனது கணவர் வெளியே சென்றதாகவும், இன்று வரை தேடியும் கிடைக்காததினால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் இவர் காணாமல் போனது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், பின்னர் கல்முனை பகுதியில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது என்பதை அறிந்து கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சென்று அங்கே பிரேத அறையில் வைக்கப்பட்ட சடலம் தனது கணவர் தான் என்பதனை உறுதிப்படுத்தியதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.