கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக தொழுநோய் தின நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தொழுநோய் தினத்தினையொட்டி இந்நிகழ்வானது 2024.01.30 ஆம் திகதியன்று வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் வைத்தியசாலையின் தோல் நோய் பிரிவினரின் ஏற்பாட்டிலும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr. இரா. முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தோல் வைத்திய நிபுணர் Dr. N. தமிழ்வண்ணன் கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் வரவேற்புரையினை தோல் நோய் மருத்துவர் Dr. J. H. மஷாகிட் வழங்கியதோடு விசேட உரையினை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் வழங்கியிருந்தார். மேலும் தோல் வைத்திய நிபுணர் Dr. N. தமிழ்வண்ணன் அவர்களினால் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. அவர் தனதுரையில் தொழுநோயின் வரலாறு, அதன் வகைகள், அறிகுறிகள் முக்கியமாக தொடுகையுணர்வு குறைவான தோலின் நிறமாற்றங்கள், நரம்புத்திரள்கள், ஏனைய தோலின் மாற்றங்கள் இதற்கு சிகிச்சை முறைகள் மருந்துகள் மற்றும் அதன் பக்க விளைவுகள் அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கமாக விவரித்தார்.

இதனை தொடர்ந்து வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்களினால் Dr. N. தமிழ்வண்ணன் அவர்களுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டு கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து நன்றியுரையினை தோல் சிகிச்சை பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி. V. இராஜலோஜினி அவர்களினால் நிகழ்த்தப்பட்டு நிகழ்வு நிறைவுற்றது.

நிகழ்வில் வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் Dr. M. N. M. சுவைப், வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்தியர் Dr. R. கணேஷ்வரன், தாதிய பரிபாலகர் திரு. N. சசிதரன், தாதிய பரிபாலகி திருமதி L. சுஜேந்திரன், பிரதம மருந்தாளர் B.சுதர்ஜினி, பிரதான சுகாதார முகாமைத்துவ உதவியாளர் திருமதி. ரோஸி சுகுமார், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். நிகழ்ச்சியினை சுகாதார கல்வி பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி. N.மனோஜினி தொகுத்து வழங்கியிருந்தார்.