கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை கிழக்கு பிராந்திய ஸ்ரீ சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தினால் நன்கொடை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை கிழக்குப் பிராந்திய ஸ்ரீ சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தினால் நன்கொடையாக 1.75 மில்லியன் பெறுமதியான 229 உள்விழி வில்லைகள் (Intraocular Lenses) வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி இரா. முரளீஸ்வரன், மற்றும் கண் சத்திர சிகிச்சை நிபுணர் Dr. N. நிரோஷன் அவர்களிடம் இலங்கை கிழக்குப் பிராந்திய ஸ்ரீ சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தினுடைய தலைவர் திரு. A. D. கஜன்குமார் மற்றும் ஸ்ரீ சத்ய சாயி நிறுவன உறுப்பினர்களினால் 2023.12.21 ஆம் திகதியன்று காலை 11.30 மணியளவில் கையளிக்கப்பட்டது.