E. P. R. L. F தலைவர் பத்மநாபா பிறந்த தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் E. P. R. L. F தலைவர் தியாகி க. பத்மநாபாவின் அகவை தினமான இன்று 19.11.2023 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அக் கட்சி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நற்பிட்டிமுனை வளர்மதி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அமரர் பத்மநபாவுக்கு நினைவுச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் புலம்பெயர் மற்றும் தாயக சிரேஷ்ட்ட உறுப்பினர்களான மதன்,கோபன் ஆகியோரின் ஒழுங்கு படுத்தலில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இவ் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்