செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கிற்கு வருகை தந்த நிர்மலா சீதாராமன்!

அபு அலா

கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு இன்று மாலை (01) இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் வருகை தந்துள்ளார்.

திருகோணமலை விமான தளத்தில் நிர்மலா சீதா ராமனை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயக்க, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் எல்.எல்.அணில் விஜயஶ்ரீ, திருகோணமலை அரசாங்க அதிபர் மற்றும் சுற்றுலா பணியக தவிசாளர் ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் ஆளுநரின் ஏற்பாட்டில் நிர்மலா சீதா ராமன் நாளை (02) திருக்கோணேஸ்வர ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன், மேலும் பல முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.