இளம் விஞ்ஞானி வினோஜ்குமாருக்கு Romania அரசினால் விருது!

அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறைக் கிராமத்தில் பிறந்த இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் Romania அரசினால் விருது வழங்கப்படுக்கிறது.

சர்வதேச ரீதியாக விஞ்ஞான புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்து ஆகியவற்றிற்கு சேவை செய்தவர்களுக்கான Romania அரசினால் வழங்கப்படும் உயரிய விருதுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

Ministry of Research, Innovation & Digitalization, Romania இணைந்து இரு வருடங்களாக Zoom ஊடாக புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மற்றும் சர்வதேச ரீதியாக நடைபெற்ற போட்டிகளில் நடுவராகவும் கலந்து கொண்டு பணியாற்றியமைக்காகவும் இவருக்கு இந்த விருதுக்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்

You missed