கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை கிழக்கு ஆளுநர் திறப்பு! முதல் நாளிலே வரலாறு காணாதளவு ஆயிரக்கணக்கான யாத்திரைகள்  பங்கேற்பு—

(கனகராசா சரவணன்)

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை இன்று (12) திங்கள்கிழமை காலை 7 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைத்துள்ளார்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அனிருத்தனின் ஆலோசனைக்கமைவாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்டிபெற்ற காட்டுப் பாதை திறப்பில் கிழக்கு மாகாண ஆளுறர் செந்தில் தொண்டமான், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.என்.டக்ளஸ், மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், லாகுகலை பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா ,மொனராகலை மாவட்ட அரசாங்கஅதிபர் ,ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க உள்ளிட்ட யாத்தியர்கள் பல அன்பர்கள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து காலை 5.30 மணிக்கு உகந்தை மலை முருகன் ஆலயத்தில் பிரதம குரு சிவசிறி க.கு. சீதாராம் குருக்கள் விசேட பூஜை நடாத்தி ஆசியுரை வழங்கியதை  தொடர்ந்து காலை 7 மணியளவில் காட்டுப் பாதையை கிழக்கு மாகாண ஆளுநர் சம்பிராய பூர்வமாக  திறந்து வைத்ததையடுத்து முதல்நாளிலே வரலாறு காணதளவிற்கு இரண்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் யாத்திரையை ஆரம்பித்தனர்.

கதிர்காமத்திற்கான பாதையாத்திரை வடக்கே யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கடந்த மாதம் 6 ம்திகதி ஜயா வேல்சாமி தலைமையிலான மிகநீண்ட பாதயாத்திரை அடியார்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அடியார்கள் ஆரம்பித்து நேற்று முன்தினம் உகந்தையை சென்றடைந்த நிலையில் இன்று அங்கிருந்து கதிர்காமத்துக்கான 56 மையில் தூரம் கொண்ட  காட்டுப் பாதையை ஆரம்பித்தனர்

இந்த காட்டுபாதை உகந்தையிலிருந்து ஐந்து மைல்தூரத்தில் வாகூரவட்டை .பின்பு 7 மைல் தூரத்தில் குமுக்கனாறு 12 மைல் தூரத்தில் நாவலடி. பின்னர் 11 மைல் தூரத்தில் வியாழை. 6 மைல் தூரத்தில் வள்ளி அம்மன் ஆறு. 8 மைல் தூரத்தில் கட்டகாமம். அடுத்து 8 மைல்; கதிர்காமம் வரையிலான 56 மைல்களை சுமார் 6 நாட்கள் பாதயைத்திரையை மேற்கொண்டு  எதிர்வரும் 19 ம் திகதி கதிர்காம கொடியேற்ற தினத்தை சென்றடைவார்கள்..

இருந்தபோதும் இந்த வருடம் காட்டுப்பாதையூடாக சுமார் 45 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில் முதல் நாளிலேயே சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதயாத்திரீகர்கள் பயணித்துள்ளனர்.

இன்று திறக்கப்பட்ட காட்டுப்பாதை இம் மாதம் 25 ஆம் தேதி மூடப்படும் என்பதுடன் கதிர்காம கொடியேற்றம் எதிர்வரும்19 ஆம் திகதி நடைபெற உள்ளதுடன்  யூலை மாதம் 04ஆம் திகதி தீர்த்தம் இடம்பெறும்  என்பதுடன் கதிர்காமப் பாதயாத்திரை அகத்திய முனிவர் தொடக்கி அருணகிரியார் ஈறாகவும், யோகர் சுவாமி முதற்கொண்டு சித்தானைக்குட்டி வரை எண்ணிறைந்த சித்தர் பெருமக்கள் இன்றுவரை தம் பாதக் கமலங்களை பதித்து பவனி சென்ற பாதையில் வருடாவருடம் நாமும் பயணிக்கின்றோம் என ‘ஷோத்திராடனம்’ எனும் நூலில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது