பண்டிகை காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று முதல் புதுப்பிக்கப்படும் போதும் முன்னர் வழங்கப்பட்ட அளவிலேயே எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த வாரமும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை எரிசக்தி அமைச்சு எடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ.சானக தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

எரிபொருள் நுகர்வு

அத்துடன் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்ட நாட்களில் பதிவாகும் நுகர்வு உள்ளிட்ட புள்ளிவிபரங்களை ஆராய்ந்த பின்னரே அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப்படுமா என்பது தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு

இதற்கமைய முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 5 லீட்டரில் இருந்து 8 லீட்டராகவும், மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 4 லீட்டரில் இருந்து 7 லீட்டராகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மேலும் பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 40 லீட்டரில் இருந்து 60 லீட்டராகவும், கார்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீட்டரில் இருந்து 30 லீட்டராகவும், லொறிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 லீட்டரிலிருந்து 75 லீட்டராகவும், வான்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீட்டரிலிருந்து 30 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

You missed