உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தல் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7.00 மணிக்கு பின்னர் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களம் விடுத்த கோரிக்கை

பரீட்சை திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மின்சார சபையின் தேவைகளையும் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்றும் (21) நாளையும் (22) இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.