மின் கட்டண உயர்வுக்கு எதிராக இன்று (8) மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை நாடு முழுவதும் அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு ஓமல்பே சோபித தேரர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

தயவுசெய்து இதற்கு எதிராக மௌனப் போராட்டம் நடத்துங்கள்.

அரை மணி நேரம் விளக்குகளை அணைத்துவிட்டு நாங்கள் போராட்டம் நடத்தலாம்.

இதேவேளை, பௌர்ணமி தினமான நேற்று முந்தினம்

(06) மின்வெட்டுக்கு மகா சங்கரத்தினர் உள்ளிட்ட பல தரப்பினர் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.