மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த மருதமுனை நபர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதமுனை அல்மனார் வீதியில் வைத்து சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
இவரிடமிருந்து போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகிறது

.