கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக வைத்தியர் டி.ஜி.எம்.கொஸ்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் வைத்து கடந்த புதன்கிழமை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

அத்தோடு இதுவரை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் புதிய பணிப்பாளராக நியமனம் பெற்று இடமாற்றம் செல்லும் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம்.தௌபீக்குக்கான விடுவித்தல் கடிதத்தையும் இதன் போது மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.