கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் விழிப்புணர்வுச் செயலமர்வு
“பிள்ளைகளின் பாதுகாப்பு” மற்றும் “பிள்ளைகளை நம்புவோம்” எனும் தலைப்புகளில், பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு, கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் பாடசாலை அதிபர் திரு. எஸ். கலையரசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜெனிதா மோகன் அவர்கள் வளவாளராகக் கலந்துகொண்டு, பிள்ளைகளின் பாதுகாப்பு, பெற்றோரின் பொறுப்புகள், மாணவர்களின் கடமைகள், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் மாணவர் நலன் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து பயனுள்ள விளக்கங்களை வழங்கினார்.
பெற்றோர்களும் மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்று, தங்களது வாழ்விலும் கல்விப் பயணத்திலும் வழிகாட்டும் பல பெறுமதியான கருத்துக்களைப் பெற்றுக்கொண்டனர்.
இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகள், மாணவர்களின் பாதுகாப்பு, நற்பண்பு வளர்ச்சி மற்றும் பெற்றோர்–பாடசாலை உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முயற்சிகளாக அமைந்துள்ளன.







