செல்லையா பேரின்பராசா
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவு இன்று 28.04.2026 காலை 09.00 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெற்றது.
மட்டு ஊடக அமையம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னதாக தராக்கி சிவராமின் உருவப்படத்திற்கு அகல் விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான இரா. துரைரெத்தினம் செல்லையா பேரின்பராசா வ.சக்திவேல் ஆகியோர் உரையாற்றினர் மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் மட்டு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன் உட்பட. பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இலங்கையில் இடம்பெற்ற ஊடவியலாளர்களின் படுகொலைகளுக்கான நீதி விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுத்து தாமதிக்காமல்
நீதியை வழங்க வேண்டுமென்று உரத்த குரலில் கோஷங்கள் முன்வைக்கப்பட்டது.






