அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்ததான முகாம்

பாறுக் ஷிஹான்

 அஷ்ரப்  ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இன்று  இரத்த தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

 இதில்   வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.

இந்நிகழ்வில் தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் , இரத்த வங்கி மருத்துவ அதிகாரி ச. மருதராஜன்,தாதிய மேற்பார்வையாளர், இரத்த வங்கி உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.  

மேலும், இரத்த தானம் செய்தவர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.