என்.சௌவியதாசன்.
கல்வி அமைச்சினால் நடைமுறைபடுத்தபடும் உள விழிப்புணர்வு வாரத்தை(10 – 17) முன்னிட்டு. கமு/ பாண்டிருப்பு மகா வித்யாலயத்தில் மாணவர்களும் அங்கு கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களதும் உள சுகாதார முக்கியத்துவத்தையும், நலனையும் மேம்படுத்துவதற்கான. மூச்சுப் பயிற்சி, மற்றும் தியான பயிற்சிகள் இடம்பெற்றன.
பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு நிலையத்தினால். இன்றைய தினம் (17) எமது நிலையத்தின். தியான பயிற்சிவிப்பாளர். சிசுபாலன் ஐயா அவர்களால் தியானம்,மூச்சுபயிற்சி,உளநல ஆன்மீக தெளிவுரைகள் என்பன வழங்கப்பட்டன.
பாடசாலை அதிபர் .கே.அருண்குமார் அவர்களின் தலமையில் இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டு நடத்தப்பட்டது.
பாடசாலையின் அதிபர்,பிரதிஅதிபர்ஆசிரியர்கள்,மாணவர்கள், பாடசாலை சமூகம் என பலர் கலந்து கொண்டதுடன் வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் இஸ்தாபகர் தவத்திரு புண்ணியமலர் அம்மா,ஆன்மீக இணைப்பாளர்,ஆலோசகர்,தொண்டர்கள் ஆகியோரும் கலந்து நிகழ்வை நெறிப்படுத்தினர்.



