இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக, திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிருவாக சேவையின் அதி விசேட தரமுடைய, திருமதி சசிதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது கடமைகளை (25) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன்னதாக திருகோணமலை பிரதேச செயலாளராகவும் பல்வேறு அரச நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.