அநுராதபுரம் கெடலாவ வாவியில் இருந்து தானியங்கி துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன என கலென் பிந்துனுவௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு விவசாயி ஒருவர் தனது கால்களைக் கழுவுவதற்காக அந்த வாவிக்குச் சென்றபோது நீருக்குள் பல தோட்டாக்கள் இருக்
கின்றமையை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதற்கமைய உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் அந்த்வாவிக்கு சென்று மேற்கொண்ட தேடுதலில் 7ஆயிரத்துக்கும் தோட்டாக்களை மீட்டுள்ளனர்.
அந்த இடத்தில் விசேட பொலிஸ் குழுவினர் மேலதிக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.