காரைதீவு பிரதேச சபைக்கு இரு பெண் NPP உறுப்பினர்கள் தெரிவு

( காரைதீவு நிருபர் சகா)

நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில்

பட்டியலில் தெரிவான தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்களும் பெண்களாவர்.

இவர்களது பெயர்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகியுள்ளது.

காரைதீவைச் சேர்ந்த 

கிருஷ்ணபிள்ளை செல்வராணி மற்றும் சவுந்தரம் சுலஸ்தனா ஆகியோரே தெரிவான இரு பெண்களுமாவர்.

 இலங்கைத் தமிழரசுக் கட்சி நான்கு வட்டாரங்களை வென்று மு.காவுடன் இணைந்து ஆட்சியமைக்க உள்ளது.

வட்டாரம் 3 இல் 

 சுப்பிரமணியம் பாஸ்கரன் ( முன்னாள் உறுப்பினர்)

வட்டாரம் 4 இல் வை.கோபிகாந்( முன்னாள் தவிசாளர்)

வட்டாரம் 6 இல் 

 சின்னத்தம்பி சிவகுமார்  

வட்டாரம் 7 இல்

 கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்( முன்னாள் தவிசாளர்) உறுப்பினர்களாக வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அதன் படி காரைதீவு பிரதேச சபையில் உள்ள ஏழு வட்டாரங்களில் நான்கு வட்டாரங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி ஈட்டியுள்ளது. 

மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் அபூபக்கர் பர்ஹான்( தேசிய மக்கள் சக்தி)

மாளிகைக்காடு மேற்கு வட்டாரத்தில் எம்.எச்.எம்.இஸ்மாயில்( மு.கா.) (முன்னாள் உறுப்பினர்) மற்றும் மாவடிப்பள்ளி வட்டாரத்தில் ஏஆர்எம்.ஹில்மி( அ.இ.ம.காங்கிரஸ்) ஆகியோர் முதல் பட்டியலில் த தெரிவானார்கள்.

காரைதீவு பிரதேச சபைக்கு 04 உறுப்பினர்கள் பட்டியல் முறையில் தெரிவானார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் இரு பெண்கள் கிருஷ்ணபிள்ளை செல்வராணி மற்றும் சவுந்தரம் சுலஸ்தனா மற்றும் மு.கா சார்பில் எம்என்எம்.றனீஸ்( முன்னாள் உறுப்பினர்) மற்றும் சுயேச்சை குழு தலைவர் ஏஎம்.ஜாகீர்( முன்னாள் உப தவிசாளர்) ஆகியோர் தெரிவாகி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஒரேயொரு பெண் உறுப்பினர் எஸ்.ஜெயராணி மட்டும் சபையை அலங்கரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது