கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்குப் போலி ஆவணைங்களைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மூவரும் நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்
தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.