( வி.ரி.சகாதேவராஜா)
கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் “ஔவை அவை ” நடத்திய வில்லுப்பாட்டுப்போட்டிமட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையில் கதிரவன் த.இன்பராசா தலைமையில் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .
இப் போட்டியில் கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது .
இரண்டாம் இடம் : அம்பிளாந்துறை இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை
மூன்றாம் இடங்கள் : செங்கலடி- கணபதி நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மற்றும்
கொக்கொட்டிச்சோலை ஈஸ்வரா அறநெறி பாடசாலை
பாராட்டுப் பரிசு பெறும் அறநெறிப் பாடசாலைகள்
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு சேக்கிழார் அறநெறிப் பாடசாலை
ஸ்ரீ கொத்துக்குளத்து முத்து மாரியம்மன் ஆலய அறநெறிப் பாடசாலை
பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் அறநெறிப் பாடசாலை
மகிழவெட்டுவான் சக்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை
குருக்கள் மடம் சிவநெறி மன்ற அறநெறிப் பாடசாலை
களுதாவளை ஓம் சக்தி அறநெறிப் பாடசாலை
வெற்றி பெற்ற அறநெறிப் பாடசாலைகளுக்கான பணப் பரிசில்கள், மற்றும் சான்றிதழ்கள், ஔவை நினைவுச் சின்னங்கள் என்பன ஔவை விழாவின் போது வழங்கி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.






