( வி.ரி. சகாதேவராஜா)

நிந்தவூர்  முருகன் ஆலய வருடாந்த முதல் பாற்குட பவனியும் சங்காபிஷேகமும் இன்று (17) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

 முன்னதாக நிந்தவூர் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து காலையில் முதலாவது பாற்குட பவனி ஆரம்பமானது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாற்குடம் சுமந்து வந்த மகளிர் நிந்தவூர் முருகன் ஆலயத்தை அடைந்ததும் அங்கு 

கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் கிரியைகள் நடைபெற்று சொரியப்பட்டன. பின்னர் சங்காபிஷேகம் நடைபெற்றது.