நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 481 ஆக அதிகரித்துள்ளது என்று இன்று வெளியான புள்ளிவிபரம் கூறுகின்றது. அத்துடன், 345 பேர் இன்னும் காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பல மாவட்டங்களிலும் தேடுதல் பணிகள் தொடர்ந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல காணாமல் போனவர்களில் பலரைக் உயிருடன் கண்டெடுக்கும் நம்பிக்கை குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.