இடைக்காலப் பிரதம நீதியரசராக எஸ். துரைராஜா நியமனம்: ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்
உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா அவர்கள் இன்று (07) முற்பகல் இடைக்காலப் பிரதம நீதியரசராக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு முன்பாக நீதியரசர் துரைராஜா அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன அவர்கள் வெளிநாடு சென்றுள்ள காரணத்தினால், அவர் மீண்டும் நாடு திரும்பும் வரை செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க அவர்களும் கலந்து கொண்டார்.
- ஜனாதிபதி ஊடகப் பிரிவு
ARVL

