மட்டக்களப்பில் வாய், புற்றுநோய் தொடர்பான பரிசோதனை முகாம்,
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பதிகாரி இ. உதயகுமார் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் நேற்று இடம் பெற்றது.
இலங்கைப் போக்குவரத்து சபைசாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இதன் போது துறைசார் நிபுணர்களினால் வாய் புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. புகைத்தல் மற்று புகையிலை போன்ற பொருள்களை பாவனை செய்வதனால் வாய்ப் புற்றுநோய் தாக்கம் அதிகம் காணப்படுகின்றது.
மாவட்டத்தில் அதிகளவான நபர்கள் புற்று நோயிலால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தரவுகள் சுட்டிக்காட்டுவதை முன்னிட்டு புற்று நோய் தொடர்பானவிழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக பிராந்திய சுகாதார பணிமனையினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
இந் நிகழ்வில் முகத்தாடை சத்திர சிகிச்சை நிபுணர் நவினி, பேராசிரியர் கருணாகரன், பிராந்திய பல்வைத்திய பொரறுப்பதிகாரி எஸ். கோகுலரமணன், மட்டக்களப்பு போக்குவரத்து சேவை முகாமையாளர் க.ஸ்ரீதரன் எனப் பலர்
கலந்து கொண்டனர்.
நன்றி – காலைக்கதிர்