தாயகத்தில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் செயற்பாடுகளை கனடாவை தளமாகக்கொண்டு இயங்கி வரும் “சீடாஸ் கனடா’ அமைப்பு முன்னெடுத்து வருகிறது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில்உள்ள பின் தங்கிய கிராமங்களையும், மாணவர்களின் கல்வித் தேவைகளையும் இனம் கண்டு கல்வி முன்னேற்ற செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
சீடாஸ் அமைப்பின் அனுசரணையுடன் இலவச மேலதிக வகுப்புக்கள் இடம் பெறுகிறது. அந்த வகையில் மாணவர்கள் பெற்றோர்களுக்கான உள வலுவூட்டும் செயற்பாட்டு அமர்வு இடம்பெற்றது.
மட்/பட்/மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய தரம் 10 மாணவர்களுக்கான மேலதிக வகுப்பு செயற்றிட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான பெற்றோர், மாணவர், வளவாளர்களுடனான மாதாந்த உள வலுவூட்டல் கலந்துரையாடல் கடந்த 2025.06.14 அன்று சனிக்கிழமை விக்னேஸ்வரா மகா வித்தியாலய மண்டபத்தில் பிரதி அதிபர் .எஸ்.தேவநேசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் சிடாஸ் கனடா அமைப்பின் தலைவர் நோனிஸ்சப்பு விஜயரெட்ணம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் செயற்பாடுகள் அடைவு மட்டம் தொடர்பாகவும் அவதானித்தார் , மேலும் அவர் செயற்றிட்டம் தொடர்பாக தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்ததுடன் இதற்குத் தேவையான சகல உதவிகளையும் தொடர்ந்து வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்போது சிடாஸ் மட்டக்களப்பு அமைப்பின் தலைவர் .முத்துராஜா புவிராஜா அவர்கள் கடந்த மே மாதத்திற்கான மாதாந்த அலகுப் பரீட்சைப் புள்ளிகள் மற்றும் மாணவர் வரவு போன்ற விபரங்களைக் காட்சிப்படுத்தி மாணவர்களின் முன்னேற்றம் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியதுடன் உரிய ஆலோசனைகளையும் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






