நாளை இருபெரும் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம் !

( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வரலாற்று பிரசித்தி பெற்ற இரு பெரும் ஆலயங்களின் மகாகும்பாபிஷேகம் நாளை (8) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.

  வரலாற்று பிரசித்தி பெற்ற  மட்டக்களப்பு – புன்னைச்சோலை 

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பெரும் சாந்தி விழா நாளை 08 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

இங்கே  நிருமாணிக்கப்பட்டுள்ள நவதள இராஜகோபுரம் கண்ணைப் பறிக்கும் வகையில் மிகவும் அழகாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில்  இங்கே தான் நவதள இராஜகோபுரம் முதல் தடவையாக நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

அதேவேளை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களின் எல்லையில்  மகாவலி நதி தீரத்திலே அமைந்துள்ள வெருகலம்பதி  கஜவல்லி மஹாவல்லி சமேத ஸ்ரீ சித்திர வேலாயுத முருகபெருமானுக்கும் ஏனைய பரிபாலன மூர்த்திகளுக்கும் மஹாகும்பாபிஷேகம் நாளை  08.06.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00மணியளவில் கோலாகலமாக இடம்பெறும்.