உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் அஞ்சலி!

அடிப்படைவாத பயங்கரவாதிகளால் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குததில் உயிர்நீத்த உறவுகளுக்கு இன்று அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தால் பெரியநீலாவனையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த தாக்குதல் இடம்பெற்று இன்று ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றது. அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள் பலரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.