கல்லாறு பாலத்தில் கோழி ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விற்பனைக்காகக் கோழிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் ரக லொறி ஒன்று கல்லாறு பாலத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் லொறிக்குப் பலத்த சேதமேற்பட்டுள்ளது.


கோழிகளும் வீதிகளில் சிதறிக் காணப்பட்டன.சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே இந்த விபத்துக்குக் காரணம் என சொல்லப்படுகிறது.
விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன