அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் (ஏப்ரல் 8) முதல் வழங்கப்படும் என்றும் வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் உயர்த்தப்பட்ட 10,000 ரூபா அரச ஊழியர் கொடுப்பனவு இம்மாத சம்பளத்தில் இணைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
(ஏப்ரல் 7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 10ஆம் திகதிக்குள் அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.