கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற குழந்தை நல வைத்திய நிபுணர் Dr. V. பிரேமினி அவர்களின் பிரியாவிடை நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் Dr. V. பிரேமினி அவர்கள் இடமாற்றம் பெற்று செல்வதனையிட்டு இப்பிரியாவிடை நிகழ்வானது வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr. இரா. முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

. இந் நிகழ்வில் தலைமையுரை மற்றும் வரவேற்புரை வைத்தியசாலையின் பணிப்பாளரினால் நிகழ்த்தப்பட்டது. மேலும் வைத்திய நிபுணர்களினால் குழந்தை நல வைத்திய நிபுணர் Dr. V. பிரேமினி அவர்களுடன் பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்களினால் Dr. V. பிரேமினி அவர்களுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டு கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. மேலும் நிகழ்வில் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் Dr. A. W. M. சமீம், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் Dr.S. N.ரொஷாந்த், கதிரியக்கவியல் வைத்திய நிபுணர் Dr. M. S. F. மபா(f)ஷா, மயக்க மருந்து வைத்திய நிபுணர் Dr. உபசேன சொய்ஷா, இழையவியல் வைத்திய நிபுணர் Dr. T. சுபன்யா, கணக்காளர் திரு. M. கேந்திரமூர்த்தி, தாதிய பரிபாலகர் திரு. N. சசிதரன், தாதிய பரிபாலகி திருமதி L. சுஜேந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் திரு. T. தேவஅருள், பிரதம மருந்தாளர் B.சுதர்ஜினி, பிரதான சுகாதார முகாமைத்துவ உதவியாளர் திருமதி. ரோஸி சுகுமார், வைத்தியசாலையின் குழந்தை நல பிரிவு வைத்திய அதிகாரிகள், பொறுப்பு தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். நிகழ்ச்சியினை திட்டமிடல் பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திரு. P. செல்வகுமார் தொகுத்து வழங்கியிருந்தார்.