அகில இலங்கை பாடசாலைக்கு இடையேயான ரோபோ தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் மூன்றாமிடம்.

(கலைஞர்.ஏஓ.அனல்)

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ரோபோ தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க தேசிய மட்டப் போட்டிகள் கொழும்பு மகரஹம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 05.12.2023 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் தரம் 10 இல் கல்வி பயிலும் கி.ஆஸ்திகா ” புதிய படைப்புக்கான ஆக்கத்திறன்” பிரிவில் கல்வித்துறை சார்ந்து போட்டியிட்டு அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார். குறித்த மாணவி மாகாண மட்டத்தில் நடைபெற்ற போட்டில் தொடரிலும் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டார்.

இம்மாணவிக்கான பயிற்சிகளை திறன்பட வழங்கி வெற்றிபெறுவதற்கு முன்னின்று உழைத்த ஆசிரியர் திரு .ம.அனுசாந்தன் பாடசாலை அதிபர், பிரதி அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் பாராட்டி கெளவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.