கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இலங்கையின் அதி தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் 2023.11.21 ஆம் திகதி வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்களுக்கான “அவசர உயிர் காப்பு” செயன்முறை பயிற்சி பட்டறையானது வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இப் பயிற்சி பட்டறையில் வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.இரா. முரளீஸ்வரன், மயக்க மருந்து வைத்திய நிபுணர் Dr.K. சுதேஸ்வரி, வைத்திய அதிகாரிகள், இலங்கையின் அதி தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள், வைத்தியசாலை சிற்றூழிய மேற்பார்வையாளர்கள், சுகாதார உதவியாளர்கள் மற்றும் வைத்தியசாலையின் ஊழியர்களும் கலந்து கொண்டனர். மேலும் செயன்முறை விளக்கங்களினை மயக்க மருந்து வைத்திய நிபுணர் Dr.K. சுதேஸ்வரி அவர்களும் அவருடைய வைத்திய உத்தியோகத்தர்கள் குழுவினரும் இணைந்து செயற்கை மனித உடல் மாதிரிகளை பயன்படுத்தி செய்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டன.