இலங்கையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தேவையான நேரத்தைப் பெறுவதற்காக எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி உட்பட ஜூன் 29 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நீண்ட வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (25) பிற்பகல் விசேட அறிக்கையொன்றை விடுத்து மத்திய வங்கியின் ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் செயல்பாட்டில் நாட்டிலுள்ள எந்தவொரு வங்கியின் வைப்புத்தொகைக்கும் மற்றும் வட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.