காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் மருந்து பொருட்கள் அன்பளிப்பு!

காரைதீவில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் காரைதீவு மக்களினால் “காரைதீவு மக்கள் ஒன்றியம்” என்ற அமைப்பின் மூலம் 2023.03.14 இன்று 200000/- ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

காரைதீவு பிரதேச வைத்திய அதிகாரி அவர்களிடம் அமைப்பின் மற்றும் அங்கத்தவர்கள் நேரடியாக வைத்திய அதிகாரியிடம் குறித்த அன்பளிப்பை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.