எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று (28) மற்றும் நாளை மறு தினங்களில்(29) தலா 40,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.