(கனகராசா சரவணன்)

கரப்பான் பூச்சியுடன் கோழிப்புரியாணி பார்சலை வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள பிரபல உணவம் ஒன்றின் உரிமையாளாரை மட்டக்களப்பு

நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் எச்சரித்து 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு நேற்று வியாழக்கிழமை (08) உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 30 ம் திகதி மட்டு போதனா வைத்தியசாலையில் பிரிவு ஒன்றில் கடமையாற்றிவரும் தாதியர்கள் விருந்து உபசாரம் ஒன்றிற்காக கோழிப்புரியாணியை ஓடர் கொடுத்து வாங்கிச் சென்று அதனை உண்ணுவதற்காக திறந்தபோது ஒருவரின் பார்சலில் கோழிப் பொரியல் இறைச்சியுடன் கரப்பான் பூச்சியும் பொரித்த நிலையில் இருந்துள்ளது

இதனையடுத்து மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்டதுடன் உணவக முதலாளியை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 8ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதியளிததார்.

குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை விசாரணைக்காக எடுத்தபோது கடைஉரிமையாளரை நீதவன் எச்சரித்து 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.

அதேவேளை சுகாதார அதிகாரிகளால் இன்னொரு உணவகத்துக்கு எதிராக சுகாதார அதிகாரிகள் வழக்குதாக்குதல் செய்தனர் அதன் உரிமையாளருகரை 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.