பொதுப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 18 மோட்டார் சைக்கிள்களை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
 
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  திங்கட்கிழமை (06)  மாலை சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரதிப் குமாரவுக்கு  கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றிவளைப்பின் போது போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டு மற்றும் தலைக்கவசம் அணியாமல் செல்லல் , சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் செல்லல் ,  நீதிமன்ற பிடியாணை என பலர் கைதானதோடு  மோட்டார் சைக்கிள்கள் 18 க்கும் மேற்பட்டவைகள்  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்  கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சுற்றி வளைப்பின் போது  சம்மாந்துறை, சவளக்கடை, மத்திய முகாம், கல்முனை ,காரைதீவு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன்  220 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில்  27  வயது சந்தேக நபர் மற்றும்  நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த  சந்தேக நபர்  என குறித்த சுற்றிவளைப்பில்  கைது செய்யப்பட்டனர்.


மேலும்  இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் திட்டமிடலில்   சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி   தலைமையிலான  குழுவினர் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை   மேற்கொண்டு வருகின்றனர்.