இரண்டாவது மாதாந்த கொடுப்பனவையும் கல்விக்கு வழங்கிய நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன்! அனைத்து மாதாந்த கொடுப்பனவையும் தர்மசேவைக்கே வழங்கப்போவதாக உறுதி.
தனது இரண்டாவது மாதாந்தக் கொடுப்பனவை மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கே கையளித்தார் நாவிதன்வெளி பிரதேச சபையின் உபதவிசாளர் புவனரூபன்..
தனது இரண்டாவது மாதாந்தக் கொடுப்பனவை தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த அன்னமலை
ஸ்ரீ சக்தி பாடசாலையின் 5 மாணவர்களுக்கும், நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தின் 1மாணவிக்கும், 07ம் கிராமம் நாமகள் வித்தியாலயத்தின் 1மாணவிக்கும் அப்பியாச கொப்பிகளை வழங்கி மாணவர்களை கெளரவித்து வைத்தார்.
இந்நிகழ்வு 2025.09.14 திகதி அன்னமலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கண்ணதாசன் ஆசிரியர், சமூக சேவையாளர் திருச்செல்வம், மற்றும் பல்கலைக்கழக மாணவிகள் கொழும்பு பல்கலைக்கழகம் செல்வி திவ்யபாரதி, கிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகம் செல்வி றிக்சாயினி ,கிழக்குபல்கலைக்கழகம்
செல்வி இந்துஜா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தியதோடு பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.. அத்தோடு உபதவிசாளரின் சேவை மனப்பாங்கினையும் வாழ்த்தினர்..
பிரதேச சபை உபதவிசாளருக்கு வழங்கப்படும் தனது மாதாந்தக் கொடுப்பனவை மாதம் மாதம் தனது மாதகொடுப்பனவை உதவியற்ற குடும்பங்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்குவதாகவும் உபதவிசாளர் கு.புவனரூபன் தெரிவித்தார்.






